Archive for the ‘தோமா’ Category

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்!

ஜூன் 24, 2012

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைஅதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது  பற்றிய விளக்கம்!

இணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/  என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.

இணைத்தள  நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின்  உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

கருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்!

இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:

  1. சரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.
  2. போலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.
  3. சரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,
  4. மாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.
  5. நீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.
  6. பல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்
  7. உள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,
  8. இந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.
  9. தேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.
  10. இவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.

இவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள் என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.

இனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.

இந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள்போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)

https://thomasmyth.wordpress.com/2012/06/10/saint-thomas-legends-in-kerala-created-by-the-portuguese/

கேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள்திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)

https://thomasmyth.wordpress.com/2012/06/10/saint-thonas-legends-in-kerala-chattambi-seamigal-kristtava-chedanam/

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள்வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)

https://thomasmyth.wordpress.com/2012/06/10/saint-thomas-legends-in-kerala-manufactured-by-the-portuguese/

 

கேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.

இந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.

தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம்கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்

https://thomasmyth.wordpress.com/2012/05/26/thomas-bhagawati-amman-flirtatious-companions/

கற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.

மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

https://thomasmyth.wordpress.com/2012/05/27/mary-kannagi-sisters-the-thmoas-myth-spinners/

ஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்! இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:

சிவனை இழிவு படுத்தும் கதைகள்கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

https://thomasmyth.wordpress.com/2012/05/27/thomas-legends-denigrating-lord-shiva/

கிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:

குத்னாஹோராமண்டையோடுஎலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்!

https://thomasmyth.wordpress.com/2012/04/22/kutna-hora-ossuary-bone-church-czech/

கபாலிகசதுக்கம்கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்!:

https://thomasmyth.wordpress.com/2012/04/21/kaplica-czaszek-chapel-f-skulls-bones-venerated/

கந்தர்புரியின்செயின்ட்தாமஸும், மைலாப்பூரின்கட்டுக்கதைதாமஸும் (கடற்கரையில்கபாலீசுவரம்)

https://thomasmyth.wordpress.com/2012/04/08/similarities-between-the-legends-of-thomas-canterbury-and-mythical-thomas-of-india/

தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்அற்புதங்கள் பல நடந்த இடம்!

https://thomasmyth.wordpress.com/2012/04/13/thomas-skull-at-patmos-island-and-related-legends/

ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு,  ஊர்வலம், வழிபாடு இத்யாதி!

https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/

எடிஸ்ஸாவில் தாமஸ் சமாதிஎலும்புக்கூடு, எலும்புகள்!

https://thomasmyth.wordpress.com/2012/04/14/thomas-relics-at-edessa-turkey/

அமெரிக்காவில் செயின்ட் தாமஸ்புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள்ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்!

https://thomasmyth.wordpress.com/2012/04/15/saint-thomas-in-america-the-final-destination/

சைனாவில் தாமஸ்:  சர்ச்சுகளை  65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்!

https://thomasmyth.wordpress.com/2012/04/15/thomas-in-china-that-too-in-the-first-century-ce/

சென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:

பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றதுகடற்கரையில் கபாலீசுவரம்

https://thomasmyth.wordpress.com/2012/04/07/old-but-demolished-structures-prove-the-exustence-of-a-temple-at-seashore-of-mylapore/

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

https://thomasmyth.wordpress.com/2012/04/06/original-kapaleswarar-temple-inscriptions-found-disappeared-mutilated/

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறதுசரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

https://thomasmyth.wordpress.com/2011/12/31/thomas-myth-spread-by-dinamalar-2/

தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதைதேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை!

https://thomasmyth.wordpress.com/2011/02/28/thomas-myth-spread-by-dinamalar/

தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?

https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!

https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

https://thomasmyth.wordpress.com/2010/05/03/what-sebastian-seman-has-to-do-with-kapaleswarar-temple/

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

https://thomasmyth.wordpress.com/2010/04/19/christians-who-demolished-kapaleswarar-temple-enact-another-drama/

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறதுமுன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

https://thomasmyth.wordpress.com/2010/01/28/temple-itselfsays-that-it-was-demolished-by-christians/

வேதபிரகாஷ்

24-06-2012

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)

ஜூன் 10, 2012

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)

மேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:

கோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that
there is a local deity called Mari, or Mariamma, much dreaded as the goddess
of small-pox, and highly venerated. Amma, in Malayalam, means mother.These bells are struck by the Brahmans when they enter the temple, but must
not be touched by people of inferior castes.2 It is just possible that some of the Portuguese doubted whether these
Hindu Gods and images represented the saints of their own churches.
Castanheda (i, p. 57) says that when Joao de Sd knelt down by the
side of Vasco da Gama, he said: “If these be devils, I worship the true God”;
at which his chief smiled. But however this may be, it is equally true that
the reports furnished by the heads of the expedition described these Hindus
as Christians, and that the king believed them to be so (see[5] Appendix A.).

இதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.

பாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.

கிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்

ஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.

16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East,  to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.


கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.

The first notices of this ancient people, in recent times, are to be found in the Portuguese histories. When Vasco de Gama arrived at Cochin on the coast of Malabar, inthe year 1503…………………  
   

பச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.

  கிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.

இது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.

வேதபிரகாஷ்

10-06-2012


[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.

[2] இது c. 1460 or 1469 – 24 December 1524  வாஸ்கோட காமாவின் தேதியாம்.

E. G. Ravenstein, A Journal of the first voyage of Vaco da Gama, 1497-99, the Haklut Society, London, M.DCCC.XCVIII, p.xiii. இவர் 1460 மற்றும் 1469 என்று இரண்டு தேதிகளை தருகிறார்.

[3] E. G. Ravenstein, A Journal of the first voyage of Vaco da Gama, 1497-99, the Haklut Society, London, M.DCCC.XCVIII, p.54.

[4]  Vasco da Gama said that this temple must be a Christian cathedral.
Inside the temple was an idol which, Vasco da Gama said, must be the Virgin. Indians pointed to statue and repeated something that sounded like “Maria, Maria.” Probably the idol represented Mari, a Hindu goddess. Painted on the temple walls were many images of Hindu gods and goddesses, which Vasco da Gama identified as Christian saints. The explorers observed, “Some of these saints had four or five arms.” http://www.oldnewspublishing.com/dagamma.htm

[5] Letter to the King and Queen of Castile, July 1499 – pp.119-120sa; 
Letter to the Cardinal Protector, August 28, 1499
E. G. Ravenstein`     , A Joural of the first viyage of Vasco dagama, London, printed for the Hakluyt Society, 1898 (AES reprint 1995).

[6] E. G. Ravenstein, A Joural of the first viyage of Vasco dagama, London, printed for the Hakluyt Society, 1898 (AES reprint 1995), pp.52-55.

[7] Henry Yule and Henry Cordier (Trans.), The Book of Ser Marco Polo – The Venetian, concerning the Kingdoms and Marvels of the East, Vol.II, 1971, London (Munshiram Manoharlal Publishers Private Limited edition, 1993, p.338).

[8] Henry Yule and Henry Cordier (Trans.), The Book of Ser Marco Polo – The Venetian, concerning the Kingdoms and Marvels of the East, Vol.II, 1971, London (Munshiram Manoharlal Publishers Private Limited edition, 1993, p.346).

[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)

ஜூன் 10, 2012

கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)


கேரளாவில் சரித்திர ரீதியில் கிருத்துவத்தின் ஆரம்பம்: கேரளாவில் சரித்திர ரீதியில், கிருத்துவம் இடைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பியர்களின் வரவிற்குப் பின்தான் ஆதாரங்களுடன் காணப்படுகிறது. சமகால எழுத்துமுறையில் உள்ள ஆவணங்கள் மூலமாக அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றின் மீது ஆதாரமாக சரித்திரம் எழுதப்படுகிறது.

  • செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),
  • நெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),
  • சிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),
  • ஜெகோபைட்டுகள் (Jacobites),
  • நஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),
  • கத்தோலிக்கக் கிருத்துவர்கள்

என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், பிரிவுகள், சர்ச்சுகள் எல்லாமே 16-17 நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள ஆதாரங்களுடன் காணப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றிலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தன்மையுடன் இருக்க விரும்பின / விரும்புகின்றன. இத்தகைய பிரிவுகள் சொத்துக்களுக்காக, அதிகாரத்திற்ககக ஏற்பட்டுள்ளன (அல்லது ஏற்படுத்தப் பட்டுள்ளன[1]) என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அதனுடன் பிறகு தொடர்புபடுத்தப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் கதைகள், இட்டுக் கட்டுக்கதைகளாக, கட்டுக்கதைகளாக, போலித்தனமாகத் தான் காணப்படுகின்றன. அவர்களே fable, myth, legend, fiction, tale, story, fairy tale, heresy போன்ற வார்த்தைகள், சொற்றொடர்களைத்தான் உபயோகப் படுத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாக இக்கதைகளைப் புனைந்து ஆதாரங்களை[3] உருவாக்கியபோது, முரண்பாடுகளும் அதிகரித்தன.

ஐரோப்பியர்கள் கிருத்துவர்களை கேரளாவில் கண்டுபிடித்தது: கிருத்துவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் “கிருத்துவர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்” தான் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு பழமொழிபோல வழங்கிவருகிறது. அதுபோலவே, ஐரோப்பியர்கள் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் எனப்பட்டவர்களை 1501ல் பெட்ரல்வரெஸ் கப்ரல் என்பவன் மூலம் தான் தெரிந்து கொண்டனராம்[4]. பிறகு டான் வாஸ்கோ ட காமா அங்கு அனுப்பப்பட்டு சரிபார்த்துவர அனுப்பப்பட்டாராம். அவனது விவரங்களையும் நம்பாததால், கோவாவின் பாதிரிக்கு ஆணையிடப்பட்டது. 1645ல், கோவாவின் பாதிரி டோம் ஜோன் டல்புகர்க் மதவிஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று வெட்கப்பட்டு, வின்சென்ட் என்ற பிரான்சிஸ்கன் மிஷனரியை அனுப்பினாம். இந்த வின்சென்ட் கிராங்கனூருக்குச் சென்றதும், இந்துகோவில்களைப் போல சர்ச்சுகளைக் கட்டி, அங்கு போதித்தானாம்[5]. 1546ல் கிராங்கனூரில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்தானாம். அதாவது போர்ச்சுகீசியர் எப்படி உள்ளூர் இந்துக்களை அல்லது அவர்கள் கற்பனை செய்தது போல “இந்து-கிருத்துவர்களை” கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சிகள் ஏற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. தாமஸின் கட்டுக்கதையை ஆதரிக்க வேண்டும், அதே நேரத்தில் எப்படியாவது அவர்களை வாடிகனின் கட்டுப்பாட்டில், அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். அதனால்தான், தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிக்கப்பட்டது, அதற்காக போலி அத்தாட்சிகள், ஆவணங்கள் உருவாக்கப் பட்டன. சம்பந்தமே இல்லாத “சிலுவைகளை”, “நெஸ்தோரியர்களுடன்” சம்பந்தப்படுத்தி, இந்து சிற்பங்களை உருமாற்றம் செய்து அதில் பஹ்லவி / பாரசீக எழுத்துகளில் பொறிக்கச் செய்தனர். இதனால் தான், அதனைப் படிக்க முயற்சித்தவர்கள், பலவாறு படிக்க ஆரம்பித்தனர், தமதிச்சைக்கேற்றபடி விளக்கம் கொடுத்தனர்.

போர்ச்சுகீசியர் / கிருத்துவர்கள் இந்தியர்கள் / இந்துக்களைப் பற்றிக் கொண்ட / கொண்டுள்ள எண்ணங்கள் / கருத்துகள்: கிருத்துவர்கள் காலிகட்டில் / கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது, இந்துக்கள் வணங்கிய தெய்வங்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினர்[6]. ஜமோரின் அல்லது சமோத்திரி என்ற அரசன் ஒரு கடவுளை வழிபட்டுவந்தான் என்று அரக்கன் போன்ற சித்திரம் வரைந்து காட்டி, அதனை “காலிகட்டின் அரக்கன்” என்றனர். இந்துக்களை “ஹெதன் / பாகன் / ஐடிலேடர் / ஜென்டைல் / ஜென்டு” என்றெல்லாம் கேவலமாகத் திட்டி எழுதினர். அவர்கள் கூரான முனைக் கொண்ட கொம்புகளில் தொங்கினர் என்றெல்லாம் வரைந்து காட்டினர். காலில் விழுந்து அனுமதி கேட்டு வியாபாரம் செய்தவர்கள், தங்களது நிலையை மறந்து, அந்நியர்கள் இருக்கின்றனர் என்றால், அவர்களால் மதம் மாற்றப்பட்ட இந்தியர்களும் வெட்கமில்லாமல், இன்னும் அந்நியர்களை ஆதரித்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள கிருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து பிஎச்டி வாங்குகிறவர்கள், புத்தகங்கள் எழுதுகிறவர்கள் அத்தகைய உண்மைகளை மறைத்து, அவர்கள் எதுவோ மிகவும் தயாளு குணம் கொண்டவர்கள், நம்மீது அக்கரைக் கொண்டவர்கள், மரியாதை செய்பவர்கள் என்பது போல திருத்து எழுதி வருகின்றனர். அத்தகைய காலனிய அடிமைத்தனம், அந்நிய கூலித்தனம், சித்தாந்த வேசித்தனம் கொண்டவர்களுக்குத் தான் இவற்றை ஆதரித்து வருகின்றனர்.

சமோத்திரி, மார்த்தாண்ட வர்மன் முதலியோரது பிறந்த / நினைவு நாட்களை ஏன் கொண்டாடக் கூடாது? சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே? டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா? அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை? இங்குதான், கிருத்துவர்கள் ஏன் தாமஸ், வாச்கோடகாமா மோன்ற சின்னங்களை இந்தியாவிற்கு எதிராக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதனை கண்டு கொள்ள வேண்டும். நம் நாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், துறவிகள், முனிவர்கள் இவர்களை விடுத்து, ஏதோ அவர்கள் ஊர்களிலேயே செல்லுபடியாகாத, மறக்கப்பட்ட, தூக்கியெறியப்பட்ட தாமஸ், ஜார்ஜ், செபாஸ்டியன் முதல்யோர்களை இந்திய கடவுளர்களோடு சம்பந்தப்படுத்தி, இந்துக்களை / இந்தியர்களை ஏய்த்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பார்க்கும் நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளவேண்டும்.

17ம் நூற்றாண்டில் பிளவுபட்டு கிருத்துவ சாகைகள் உண்டான விதம்: 17ம் நூற்றாண்டில் எப்படி கிருத்துவ சாகைகள் பிரிந்து பற்பலவாகின என்பதை அவர்களே எடுத்துக் காட்டும் ஒரு சித்திரம்.

போர்ச்சுகீசியர்கள் வரவிற்குப் பிறகுதான், அவ்வாறு அவர்கள் பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், இந்தியா முழுவதும், போர்ச்சுகீசியர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் தான் அத்தகைய அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் “கடவுளின் சொந்தமான இடம்” என்று கூறிக்கொள்கிறார்கள் போலும்! கிருத்துவர்கள் “திருவனந்தபுரம்-கடவுள் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கிண்டலாக கிருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்[7]. ஆனால், 1600-1700 ஆண்டுகள் கிருத்துவர்கள் எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று எந்த புத்தகத்திலும் சொல்லப்படாதது, அவர்கள் தூங்கினார்களா, அல்லது அவர்களது கடவுள் போல[8], இவர்களும் தூங்கினார்களா என்று தெரியவில்லை. இப்படி கேட்டுவிட்டதால், இனி அந்த இடைவெளியை நிறப்பவும் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுவார்கள்.

வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழா: மே 20, 1998 அன்று கிருத்துவர்கள் வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழாவாகக் கொண்டாட திட்டமிட்டனர். போர்ச்சுகீசியரை எதிர்த்துப் போராடிய மார்த்தாண்டன், ஜமாரின் போறவர்களின் பிறந்த / நினைவு நாளைக் கொண்டாட கேரளத்தவர்களுக்கு நினைவு வரவில்லை போலும். சுதந்திர இந்தியாவிற்கு அவனால் என்ன நன்மை என்று கூட அந்த கிருத்துவர்களுக்கு யோசிக்க முடியவில்லை. அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அல்லது வாடிகனின் கைகூலிகளாக இருக்கத்தான் மனங்கள் விரும்புகின்றனர் போலும். இந்தியாவில் பிறந்து, இந்துக்களாக இருந்து, மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இப்படி நாட்டுப் பற்று மாறும் என்பதே ஆராய்ச்சிற்குரியது. கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், சித்தாந்தரீதியில் காலனிய ஆதிக்கத்தை, சுரண்டலை எதிர்ப்போம் என்றெல்லாம் பேசினாலும், அதனைக் கொண்டாட ஆதரித்தது. ஆக கம்யூனிஸ்டுகளின் கிருத்துவர்களுடனான தொடர்பு வெளிப்பட்டது[9]. இல்லை கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனரோ என்னமோ? பொறுப்புள்ள சரித்திராஅசிரியர்களும் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, இக்கூட்டங்களுடன் சேர்ந்து கொண்டு முன்னுக்கு முரணாக பேசினர், கருத்துகளை வெளியிட்டனர்[10]. ஆனால், அப்பொழுதுதான், தாமஸும் அதனுடன் இணைக்கப் பட்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது[11]. முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[12] [எம்.சி.ராஜமாணிக்கம்[13] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[14] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[15]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர்.

வேதபிரகாஷ்

10-06-2012


[1] சிரியக்கிருத்துவர்கள் / தாமஸ் கிருத்துவர்கள் எந்த அளவிற்குப் பிளவுபட்கிறார்களோ, அந்த அளவிற்கு வாடிகன் அவர்களை தங்களது கட்டுக்காப்பில் /  அதிகாரத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் தான் தாமஸ் கட்டுக்கதையை சமயங்களில் எதிர்க்கவும் செய்கிறது, ஆதரிப்பது போல நடிக்கவும் செய்கிறது.

[3] ரம்பன் பாட்டு, தாமிர பட்டயங்கள், கல்-சிலுவைகள் முதலியன.

[4] Michael Geddes, The History of the Church of Malabar from the time of its being discovered by the Portuguese in the year 1501, London, 1684, p.2.

[5] Michael Geddes, The History of the Church of Malabar from the time of its being discovered by the Portuguese in the year 1501, London, 1684, p.9.

[6]  God Deumo (Demus or Deumus) of Calicut from “Cosmographia” (1544) by Sebastian Münster. Deumo is also described by Ludovico Verthema in 1503. Sailors first came to face with the idol of Deumo at Calicut on the Malabar Coast and they concluded it to be the god of Calicut. It is described that the ruler of Calicut (Zamorin) has a image of Deumo in his temple. Sebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer, and Hebrew scholar whose Cosmographia (1544; “Cosmography”) was the earliest German description of the world and a major work in the revival of geographic thought in 16th-century Europe. Aside from the well-known maps present in the Cosmographia, the text is thickly sprinkled with vigorous views: portraits of kings and princes, costumes and occupations, habits and customs, flora and fauna, monsters, wonders, and horrors.

[7]  Tiruvanathapuram – where God is sleeping, Christian Literature Society, Madras.

[8] பைபிளின்படி ஜேஹோவா ஆறு நாட்களில் படைப்பை முடித்துவிட்டு, ஏழாவது நாள் களைத்துத் தூங்கிவிட்டாராம். அதிலும் அந்த ஏழாவது நாள் எது என்று குடுமிப்பிடி சண்டைபோட்டு, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனராம்! செவந்த் டே அட்வென்டிஸ்ட்ஸ், ஜேஹோவா விட்னெசஸ், ஸப்பத் டே அப்சர்வர்ஸ், வெள்ளிக்கிழமை புனித நாள், சனிக்கிழமை புனித நாள், ஞாயிற்றுகிழமை புனித நாள், என கூட்டங்கள் உள்ளன.

[9] இவை ஜே.என்.யூ, ஏ.எம்.யூ, தில்லி / கொல்கொத்தா யூனிவர்சிடி போன்ற பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வருகின்றன. சரித்திரம் என்ற போர்வையில் மற்றவற்றை எதிர்த்தாலும், கிருத்துவம், இஸ்லாம் என்று வந்துவிட்டால், இந்த அடிவருடி கூட்டங்கள் தேசியத்திற்கும் எதிராகத்தான் செயல்படும்.

[10] As for Gama’s role in this design, Dr Subrahmanyam says, “Let us be clear about one thing. Gama was never interested in converting anyone. This was a later phenomenon. Gama was interested in making money, in building his career as a noble, and in acting out the orders of the Crown to a rather limited extent. I am not clear to what extent he can be seen to symbolise the Portuguese, since he was so often in opposition to the Crown.”

“The arrival of Vasco da Gama unleashed an era of cruelty and exploitation,” says historian Dr M G S Narayanan.

[11]   The First International Conference on the History of Early Christianity in India organized from 13th –17th  August, 2005 at New York with the participation of the Christhava Tamilkoil  was a resounding success. In the Business Session of the Conference held on 16th August, the delegates and participants unanimously decided to organize the Second International Conference in India. It was also decided to start anInternational Centre for the Study of Christianity in India in Chennai with a view to organize  all the future Conferences on the above theme in various countries. After the Conference was over, the Organizing Committee met  on  24-9-2005 at the premises of the Institute of Asian Studies  and unanimously decided to organize the Second International Conference in Chennai from 14th -17th January 2007. The theme of the Conference shall be  The History of Early Christianity in India – with Parallel Developments in Other Parts of Asia (including the Middle East).

http://xlweb.com/heritage/asian/christianity-conference.htm;

http://xlweb.com/heritage/asian/christianity-conference2.htm

[12] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[13] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[14] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[15] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.

சிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

மே 27, 2012

சிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

ஆறுமுக நாவலரும் கிருத்துவமும்: இந்தியமயமாக்கும் கிருத்துவர்களுக்கு சிவன் கர்த்தராகிறார். 18-19 நூற்றாண்டுகளில் இந்து மதத்தை ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் கண்டு பிடித்த விஷயம் தான் அது. ஜார்ஜ் பிரேசர், பிளாவாட்ஸ்கி போன்றவர்கள் அதிகமாகவே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆறுமுக நாவலர் போன்ற சைவ வல்லுனர்களும் எடுத்துச் சொல்லியுள்ளனர். ஆறுமுக நாவலர் தமது “சைவதூஷண பரிகாரம்” என்ற நூலில் முழுவதுமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதன் தாக்கம் வியன்னாவில் “பைபிள் நடுங்கியது” என்ற புத்தகத்தில் காணலாம்[1]. ஆறுமுக நாவலர் தான் கிருத்துவக் கடவுளுக்கு “கர்த்தர்” என்ற பெயரை வைத்தார். உண்மையில் கர்த்தர் என்ற வார்த்தை சிவபெருமானைக் குறிப்பதாகும்.

புரட்டு / தலைகீழ் / போலி ஆராய்ச்சி: தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்ற தலைகீழ் சித்தாந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் பிடித்தமான விஷயம் எனலாம். 19-20 நூற்றாண்டுகளில் கிருத்துவத்தை முழுக்க ஆராய்ந்து பற்பல புத்தகங்கள் வந்து விட்டன. உலக சரித்திரத்தில், கிமு-கிபியே எடுக்கப் பட்டுவிட்டன[2]. இந்துமதம், புத்தமதம், மணிக்கிய மதம் முதலியவற்றிலிருந்து பெறப்பட்ட பற்பல விஷயங்களின் கலவைதான் கிருத்துவ மதம், பாவம், கன்னிப்பிறப்பு, சிலுவையிலறைப்பு, உயிர்த்தெழுப்பு, மேலே செல்லுத்தல், திரியேகத்துவம் முதலிய சித்தாந்தங்களை உள்ளடக்கி அது முழுக்க ஒரு மதம் போன்ற நிலையை இடைக்காலத்தில் தான் அடைந்தது என்று மெய்ப்பிக்கப்பட்டது. எனவே தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்றவர்கள் இதனை மறுபடியும் புரட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், 100-200 ஆண்டுகளில் வெளிவந்துள்ள புத்தகங்களப் படித்துப் பார்த்தாலே, இவர்களது அந்த “உல்டா/தலைகீழ்” ஆராய்ச்சி முறை தெரிந்து விடும். இந்துக்களை ஏமாற்றி எப்படி எழுத வேண்டும் என்றே புத்தகங்கள் எழுதப்பட்டன[3].

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய சர்ச்சுகள் சொத்துப் பகிர்வு, அதிகாரப்பங்கு, வாடிகன் தொடர்பு, ஐரோப்பிய சர்ச்சுகளுடனான சம்பந்தம் முதலியவற்றால் பிரிவுண்டன. அமெரிக்க-ஜப்பான்–கொரிய நாடுகளின் தொடர்புகளினால் 2000 வருடங்களில் இறையியல் ரீதியிலும் பிளவுண்டன[4]. எல்லாமே கிடைக்கும் பணத்தைப் பொறுத்தான் அவ்வாறு ஏற்பட்டன. அந்நிலையில், இந்தியாவிலுள்ள கதைகளை வைத்துக் கொண்டு, புதியதாக கதைகளை உருவாக்கலாம் என்ற திட்டத்தை எடுத்துக் கொண்டார்கள். தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்றதை சரித்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளாததால், இந்தியாவில் ஏசு என்ற பழைய பாட்டை, மறுபடியும் பாட ஆரம்பித்து விட்டனர். இதற்கு சில முஸ்லீம் இயக்கங்களின் ஆதரவும் இருக்கிறது[5].

கிருத்துவப் போலி ஆராய்ச்சி வறைமுறை: ஆதரவு-எதிர்ப்பு; சித்தாந்தம்-எதிர்-சித்தாந்தம், சரித்திரம்-கட்டுக்கதை, உண்மை-பொய் என்ற ரீதியில், ஆய்வுக்கட்டுரகள், புத்தகங்கள், பி.எச்டிக்கள் முதலியவற்றைப் பெருக்குவது என்று 1960-70களில் திட்டமிடப் பட்டது. அதற்கேற்றப்படி, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளினின்று பற்பல ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக பெண்கள், இந்திய பெண்கள், அவர்களது நிலை, கோலம் போடுதல், பாட்டு பாடுதல், மடங்களின் நிலை, கிராம தேவதைகள், குறுதெய்வங்கள், பல்லாங்குழி என்று ஏதேதோ ஆராய்ச்சி செய்வது போல ஆயிரக்கணக்கில் வந்தார்கள். ஆனால், அவர்களது வேலை, இந்து மதத்தைக் குறைக்கூறுவது தான். நாகரிகமான போர்வையில் வந்து, இந்திய பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்டு, பல இந்திய வல்லுனர்களைக் ஜண்டு பேசி, விஷயங்களைக் கறந்து கொண்டு, தங்களது சித்தாந்தங்களுக்கு ஏற்றமுறையில் எழுதி வைத்தார்கள். அதற்கேற்றமுறையில் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி, கேம்பிடிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் பதிப்புகள் மூலம் அவர்களது புத்தகங்கள் வெளி வந்தன. இந்திய பேராசிரியர்கள் அவற்றைப் படித்து ஆதரவாக விமர்சனத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள்.  அத்தகைய ஆராய்ச்சிகளில்[6] தான், உயர்வாகப் பேசப்பட்ட சிவபெருமான்-சிவன் என்றாகி, சிவம்-சவமாகி கேவலமாகச் சித்தரிக்கப் பட்டது.

சிவனும் மூன்று பாரசீகர்களும்: மூன்று “மாகி” [Magi (singular); Magus (plural)] என்கின்ற கிருத்துவர்களும், சிவனும் நண்பர்களாக இருந்தார்களாம். வெகு தொலைவிலிருந்து இந்த நான்கு பேர்களும் பிரயாணமாக அங்கு வந்தபோது, நட்பினை வளர்த்துக் கொண்டனராம். அவர்கள் மீனாட்சி நதிக்கரைக்கு வந்தபோது, அதனைக் கரைக்கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்களாம். அப்பொழுது, சலிச்சேரி பணிக்கர் என்ற நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறுபடகில் வந்தாராம். அவர்களை பத்திரமாக அடுத்தக்கரைக்குக் கொண்டு சேர்த்தாராம். அதனால், வருடாந்திர விழாக்களின் போது சர்ச் மற்றும் கோவில்களில் பணிக்கரின் நினைவாக பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சர்ச்சில் நிலா-விளக்கினை ஏற்றிய பிறகே ஊர்வலம் ஆரம்பிக்கிறதாம். பாவம் மயிலையில், சுரமுடையார் கூத்தாடும் தேவருக்கு விளக்கெரிக்க கொடுக்கப் பட்ட இறையிலி கல்வெட்டையே காணமல் அடித்த கிருத்துவர்கள், இங்கு பணிக்கரை வைத்து நிலா விளக்கு ஏற்றவைக்கிறார்கள்[7]. என்னே கயமைத்தனம் ஆனால், ஒரு சிரியன் கிருத்துவன் சொல்கின்ற கதையோ வேறுவிதமாக இருக்கிறது.

சிவன் கைகளை உடைத்த ராஜாக்கள்: சில குறிப்பிட்ட நாட்களில், இந்துக்களால் பூஜைக்கு உபயோகப்படுத்தப் படும் மலர்கள், துளசி போன்றவை சர்ச்சில் காணப்பட்டனவாம். இது ராஜாக்களை அவமதிப்பதாகக் கருதப் பட்டதாம் (பாண்டிச்சேரி கோவில்களில் பாதிரிகள் பீ-மூத்திரம் கலந்து பக்கெட்டுகளில் வாரியிரைத்தனர்[8]. அதனை ராஜாக்கள் நன்றாக இருந்தது என்று ஏற்றுக் கொண்டார்கள் போலும்). ஒரு நாள் மாகி சர்ச் விளக்குகளுக்கு கொடுக்கப்படும் எண்ணை காணாமல் போனதாகத் தெரிந்து கொண்டானாம். அதனால், யார் அதற்குக் காரணம் என்று தெர்ந்து கொள்ள விழிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தானாம்.

அப்பொழுது சிவன் தான் சர்ச்சின் கர்வறைக்குள் நுழைந்து, எண்ணையைத் திருடிக் கொண்டுப் போவதைக் கண்டானாம். உடனே அவனை கையும் களவுமாகப் பிடித்து ராஜாக்களின் முன்பே நிறுத்தினாம். ராஜா தன்னுடைய கையிலிருந்த, செங்கோலினால் சிவனை அடிக்க சிவனின் ஒரு கை துண்டாகி விழுந்தது, மறு கையோ இரண்டு துண்டாகி விழுந்தது. On certain days, flowers typically used by Hindus [tula^i and cetti\ were found in the church. This was considered to be an insult to the kings. In retaliation, the Magi threw frankincense into the Hindu temple. One day, the Magi found that oil offerings for the church (to light the lamps) were missing, so they kept watch at night to see who was stealing it. During their vigil they found out that Siva was the culprit. The kings became angry and hit Siva with their scepter. Thus one arm was severed and the other was broken in two.

இப்படி சிவனைத் திருடனாக்கி, நம்மூர் ராஜாக்களை வைத்தே அவனது கைகளை உடைத்த கிருத்துவர்களுக்கு கற்பனை அதிகமாகவே கொடிகட்டிப் பறந்துள்ளது. இல்லை, அவர்கள் அந்த ராஜாக்கள் போர்ர்சுகீசிய ராஜாக்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம்!

உண்மையில், ஆறு (மலயத்தூர் முதலிய) சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த 300 வருடங்களில் சர்ச்சுகள் கட்டியுள்ளார்கள். இதன் சொத்துக்களை தாங்கள் அடைய, அனுபவிக்க பாதிரிகள் கட்டியுள்ள கதைகள் தாம் இவை. அதுமட்டுமல்லாது, ஆறு சிவன் கோவில்களை இடித்த, கோவில் நிலங்களை அபகரித்த உண்மைகளை மறைக்கத்தான் இத்தகைய கதைகள். அயோக்கியத்தனமான புனித கோவில்களை இடித்துவிட்டு, சிவனையே தூஷிக்க அவர்களுக்கு எப்படி மனம் வந்துள்ளது என்பதனைப் பார்க்கவேண்டும். எதிர்மறை கதைகள், விளக்கங்கள், விவரங்கள் கொடுத்து உண்மையினை மறைக்கப் பார்க்கும் போக்குதான் மேன்மேலும் வெளிப்படுகிறது.

Three wise men from east - from a third-century sarcophagus (Vatican Museums)

மூன்று “மாகி” (அல்லது மாகஸ்) எனப்பவர்கள் கிருஸ்து பிறந்தபோது, கீழ் திசையிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது[9]. உண்மையில், “மூன்று அறிந்த பெருமக்கள்”, கிழக்கு திசையிலிருந்து வந்தனர் என்றுதான் உள்ளது. ஆனால், அதனை மூன்று அறிந்த பெருமக்கள், “இந்தியாவிலிருந்து வந்தனர்” என்று திரித்துக் கூற ஆரம்பித்தனர் (three wise men came from east). அவ்வாறே கதைகளும் எழுதப்பட்டன[10], மேலும் “மாகி” என்றால் ஜொரேஸ்ட்ரியனிஸம் அல்லது பாரசீக மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அர்த்தம்[11]. அதனை கிருத்துவர்கள் தமதாக்கிக் கொண்டனர்.

வேதபிரகாஷ்

27-05-2012

The Bible Trembled - Vienna book


[1] R. F. Young and S. Jebanesan, The Bible Trembled – The Hindu-Christian Controvesies of Ninteenth-Century Ceylon, Vienna, 1995.

[2] நமு-நபி / பொசமு / பொசபி (நடப்பு சகாப்தத்திற்கு முன்பு- நடப்பு சகாப்தத்திற்கு பின்பு / பொது சகாப்தத்திற்கு முன்பு- பொது சகாப்தத்திற்கு பின்பு) என்ற முறை வந்த பிறகும், கிமு-கிபியைப் பின்பற்றும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

[3] Robinson Iyer, Esa Dasa Sastram, Methodist Episcopal Mission Press, 1899.

This book is meant for the Swadeshi Christians who learn at seminaries to impart the doctrines in Christian angle, but using Indian / Hindu terminology.

[4] Asirvadap Fabrisar, Karum Pambin Vishak Kadikku Marunthu, Kala Samrakshana Sangam, 5-D, Selvamnagar, Tanjore-7. Originaly published in 1868 in Pondicherry with the permission of the Queen Victoria, England.

[5] இந்தியாவில் ஏசு என்ற கதைகளுக்கு அஹ்மதியா போன்ற முஸ்லீம் இயக்கங்கள் தங்களது புத்தகங்கள் மூலம் சத்தூட்டி வருகின்றன.

[6] Sudhir Paul, The dialogue between Jesus and Siva, Amitis spirituelles , Paris, 1964, http://www.getcited.org/pub/102515790

[8] அனந்தரங்கப் பிள்ளையே, தனது நாட்குறிப்புகளில் விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பாவம், நம்மாட்கள் படிக்கவில்லை போலயிருக்கிறது. தெரிந்திருந்தால், அப்பக்கங்களைக் கிழித்தெரிந்திருப்பார்கள்.

[9] மாகி என்றால் மந்திரவாதி என்று பொருள், அவ்வாறுதான் கிரேக்கத்தில் வழங்கப்பட்டது. பிறகு பாரசிகப் பகுதியைக் குறிப்பிடலாம் என்று கிருத்துவ எழுத்தாளர்கள் மாற்றியெழுத ஆரம்பித்தார்கள். தாமஸ் கட்டுக்கதைக்காக அதனை “இந்தியா” என்று மாற்றி விட்டார்கள். இது ஒன்றே அவர்களது போலி ஆராய்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

[10] நம்ம ஊரில் தெய்வநாயகம், ஞானசிகாமணி, தாமஸ் ஆல்வா எடிசன், ஜான் சாமுவேல், அலெச்சாண்டர் ஹாரிஸ், நீனான் என்ற பல ஆட்கள் இக்கட்டுக்கதைகளை மேன்மேலும் திரித்து, விரித்து எழுதி வருகின்றனர்.

[11] Pervasive throughout the Eastern Mediterranean and Western Asia until late antiquity and beyond, Greek mágos, “Magian” or “magician,” was influenced by (and eventually displaced) Greek goēs(γόης), the older word for a practitioner of magic, to include astrology, alchemy and other forms of esoteric knowledge. This association was in turn the product of the Hellenistic fascination for (Pseudo-)Zoroaster, who was perceived by the Greeks to be the “Chaldean” “founder” of the Magi and “inventor” of both astrology and magic. Among the skeptical thinkers of the period, the term ‘magian’ acquired a negative connotation and was associated with tricksters and conjurers. This pejorative meaning survives in the words “magic” and “magician“. http://en.wikipedia.org/wiki/Magi

மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

மே 27, 2012

மேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

கிருத்துவ-முஸ்லீம் மதங்களில் தாய் வழிபாடு முரண்பாடு: இந்தியாவில் சக்தி வழிபாடு இருந்தது, இருப்பதில் ஒன்றும் புதியதில்லை. தாயே கடவுளாக மதிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால், மற்ற மதத்தினருக்கு அத்தகைய எண்ணமே தெய்வகுற்றமாகிறது. ஆமாம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கடவுள் எப்பொழுதுமே ஆணாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிக்கொள்வார்கள். அம்மதங்களில் உள்ள தாய்வழிபாடு, பெண்தெய்வ வழிப்பாடு முதலியவற்றை மறைப்பார்கள், மறுப்பார்கள்[1]. மேரியின் வழிபாடு கத்தோலிக்கக் கிருத்துத்தில் முதன்மையானது. ஆனால், மேரி கடவுள் கிடையாது. மேரியின் வழியாக ஏசு மனித உருவில் வந்து பிறந்தால், மேரியை ஏன் கடவுளாக மதிக்கக் கூடாது என்று கிருத்துவர்கள் விளக்குவது கிடையாது.

 

குளூனி புத்தகத்தின் அட்டையில் இத்தகைய ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள். மேரி ஒரு இந்திய/ இந்துப் பெண்ணைப் போல சேலை-ஜாக்கெட் அணிந்துள்ளாள். போதாகுறைக்கு நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக வெண்ணிறமான பொட்டு வைத்தது போல காணப்படுகிறது. பொதுவாக திருமணமான பெண்ணின் நெற்றியில் குங்குமத்தைத் தான் வைப்பார்கள். அம்மனாக பாவிக்கின்ற சிலைகளுக்குக்கூட குங்கும தான் வைக்கப்படும். அப்படியிருக்க குங்குமம் அல்லாத அந்த வெண்ணீறப் பொட்டு என்னவாக இருக்கும் எனும்போது, விபூதி என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், விதவைகள் தான் விபூதி வைத்துக் கொள்வது வழக்கம். பெண் தெயம் சிலைகளுக்குக் கூட விபூதி வைக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே, மேரிக்கு விபூதி வைக்கப் பட்டிருந்தால், அவள் பெண் தெய்வம் இல்லை, ஆண் உறவில்லாதவள், இருப்பினும் ஆண் இணையற்றவள். அதாவது பெயருக்கு கணவன் ஜோசப் இருந்தாலும், ஆவியினால் புணரப்பட்டு, கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவ்வாறாக சித்தரிக்கப் பட்டுள்ளாள் போலும்!

ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது: ஏசுவைக் கிருத்துவர்களாக மதிக்க வேண்டும் என்றால், மேரியை கடவுளாக மதிக்க முடியாது. இருப்பினும் மேரியின் கணவர் ஜோசப் மதிக்கப்படுவது கிடையாது. கடவுள் என்று வரும்போது, ஜேஹோவைத் தான் கடவுள் என்பார்கள், இல்லை ஏசுவைக்கூட கடவுளின் மைந்தன், கடவுள் என்பார்கள் ஆனால், மேரி கடவுள் கிடையாது. அதாவது, ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது. மேரியைப் போல, ஜோசப்பும் கடவுள் கிடையாது. சிவனுடன், தேவி, அபிராமி, சக்தி, பார்வதி என்றும் சமமாக வழிபட்டு வருவது இந்திய-இந்து பண்பாடு. ஆனால், மேரியுடன் ஜோசபை வைத்து கிருத்துவர்கள் வழிபாடு செய்வதில்லை. ஏன் என்று அவர்கள் விளக்குவதும் கிடையாது. கேட்டால் ஹார்வாட் பல்கலைக்கழக பேராசியர்களுக்கே பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது[2]. இந்நிலையில் தான், இவர்கள் மேரியும் கண்ணகியும் சகோதரிகள் என்று கதைவிடுகிறார்கள். முன்பு தாமஸும், பகவதி அம்மனும் காதலர்கள் என்று கிருத்துவர்கள் சொன்ன கட்டுக்கதையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்[3]. அக்கட்டுக்கதைவை வைத்துக் கொண்டு, பெரிய-பெரிய மேனாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்ன[4], பட்டங்கள் என்ன, எல்லாமே தாராளமாக நடந்து கொண்டேயிருக்கின்றன, பறந்து கொண்டே இருக்கின்றன!

 

கிருத்துவர்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை: கிருத்துவர்கள் தாம் மேனாட்டு பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுகிறோம், நாகரிகமாக இருக்கிறோம், ஆங்கிலம் பேசுகிறோம் என்று பல விஷயங்களில் மற்ற இந்தியர்களை விட உயர்ந்திருந்தாலும், மத விஷயத்தில் சகிப்புத்தன்மையற்றவர்களாகவே இருந்து வருகிறாற்கள். 19-20 நூற்றாண்டுகளில் கூட கேரளாவில், மத ஊர்வலங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் கலாட்டா செய்ய முனைந்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரியவருகின்றது. இந்துக்கள் தேவதைகளைன் வணங்குவது, பலிகொடுப்பது, பூஜைசெய்வது, ஊர்வலம் போவது என்பதெல்லாம், காலங்காலமாக கிராமங்களில் ஊர்களில் நடந்து வருகின்றன. ஆனால், கிருத்துவர்கள், அதற்கேற்றார்போல, புதிய கிருத்துவ சாமியார்களைக் கண்டு பிடித்து, கிராமதேவதைகள் அல்லது பிரியமான குலதெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுவது, இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில், இவர்களும் புதிய விழாவை அறிமுகப்படுத்திக் கொண்டாடுவது, போட்டியாக ஊர்வலம் போவது என்றெல்லாம் ஆரம்பித்தனர்[5]. சர்ச்சுகளுக்குள் நடப்பவை வெளியே நடக்க ஆரம்பித்தன. இதனால், கிருத்துவர்கள் மீது, இந்துக்களுக்கு கோபம் ஏற்பட்டது, பிறகு தொடர்ந்து இடைஞ்சல்கள் செய்து வரும்போது வெறுப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்துக்களைப் போலவே, தமது விக்கிரங்களை, சிலைகளை கோவில் வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்துக்களுக்கு எதிராக கூப்பாடு போட ஆரம்பித்தனர். இதனால், பதிலுக்கு இந்துக்களும் கத்த ஆரம்பித்தனர். இத்தகைய கூப்பாடுகள் அசிங்கமான வார்த்தைகளிலும் முடிந்தன[6]. பொதுவாக கிருத்துவர்கள், விக்கிர ஆராதனையை (idolatory) எதிர்ப்பவர்கள், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களைக் குறவாக பேசி வருபவர்கள். பிறகு கிருத்துவர்கள் எப்படி, அதே “செய்யக்கூடாதவைகளை செய்து”, இந்துக்களுக்கு போட்டியாக வந்தனர் என்று தெரியவில்லை. மேலும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மிக்கியமான விஷயங்களை மறந்து, மறைத்து மேல்-மேல் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதிவருவது, பட்டங்கள் பெறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

 

   

வாடிகனின், போப்பின், இந்திய கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள்: கிருத்துவர்கள் உண்மையில் கிருத்துவர்களாக இருக்க வேண்டும், இல்லை இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துக்கள் போல நடித்துக் கொண்டு, தாங்கள் கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதற்கு “உள்-கலாச்சாரமயமாக்கல்” (inculturation) போன்ற திட்டங்களை வஞ்சமாகக் கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை[7]. ஏனெனில், ஒருபக்கம் அதனை ஆதரித்து பரப்பும் வேலையில், மறுபக்கம், போப் யோகா செய்யக் கூடாது, பரத நாட்டியம் ஆடக்கூடாது, “ஓம்” என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம், முஸ்லீம்களைப் போல பத்வா போட்டு / புல்களை (issuing bulls) / ஆணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. கிருத்துவர்களே அவற்றை எதிர்த்தும் வருகிறார்கள்[8]. 70,000 பேய்களையோட்டிய வாட்டிகனின் பேயோட்டி, யோகா சாத்தானின் வேலை, அது கிருத்துவத்திற்கு ஒவ்வாதது[9] என்று குறியிருக்கிறார்[10], ஆனால், ஏசுவை பெரிய யோகி மாதிரி சித்தரிப்பதை என்னவென்பது? இதெல்லாம் நிச்சயமாக கிருத்துவர்களின் இரட்டை வேடங்களே.

Fr Gabriel Amorth 25-11-2011 - Yoga devil practice

மேரி-கண்ணகி சகோதரிகள்: கேரளா பழைய சேரநாடாகிறது, அதனால் இங்கு கண்ணகி வழிபாடு உள்ளது. அதற்கு முன்னரே சக்தி வழிபாடும் இருந்திருக்கிறது. பெண்மையை தெய்வீகமாக மதித்த கேரள பூமி, அந்நியயர்களின் வரவிற்குப் பிறகு மாற ஆரம்பித்தது. உள்ளூர் பழக்க-வழக்கங்கள் மாற ஆரம்பித்தன; திரித்துக் கூறப்பட்டன; எழுதப்பட்டன; அவ்வாறான கலப்பில், குழப்பத்தில் அம்மதங்கள் கதைகளை உருவாக்கின. மனர்காட் என்ற ஊரில் மேரியும், கண்ணகியும் நட்புறவுடன் இருந்தார்களாம். ஆனால், ஒருமுறை கிருத்துவர்கள் ஊர்வலம் போனபோது, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ளவில்லையாம். குறிப்பாக மேரி தன்னை மதிக்காதலால் தேவிக்கு / கண்ணகிக்கு கோபம் உண்டாகியதாம்.

இதனால் அவ்வூரில் நோய் உண்டாகியது, சின்னம்மை பரவியது. உடனே கோவிலில் வெளிச்சப்பாட்டுப் பாடி, காவடி எடுத்து காரணம் கண்டறிந்த போது, மேரி அவ்வாறு தேவியை மதிக்காதது தான் என்றறிந்தனர்.  இருதரப்பு மக்களும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், சகோதரிகள் ஒன்று சேர்ந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம். அதனால், சகோதரிகள் ஒப்புக்கொண்டு இணைந்தனராம், மறுபடியும் பழக ஆரம்பித்தனராம். These two females are generally on good terms. One day, however, when there was a procession for one of the figures, the two did not look at each other. One of them, I think it was the devl, became offended because she was not acknowledged by the other. Following this, there was an epidemic of chicken pox. The temple oracle (veliccappdtu) castms divining shells (kavati) and found out the reason, which was that the devl was offended by the other. Because the people were affected by the quarrel, the two sisters needed to come to a reconciliation and thus today they are rnends again.

இதிலிருந்து, சுலபமாக நாம் பெறப்படும் விஷயங்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டு விவாதிக்கலாம்.

  1. மேரி கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.
  1. அல்லது கிருத்துவகள் கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.
  1. அல்லது கிருத்துவகள் கண்ணகி / தேவியின் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர் / தாக்கினர்.
  1. இதனால் கலவரம் ஏற்பட்டது.
  1. கலவரத்தைக் கட்டுப்படுத்த கிருத்துவர்கள் இந்துகக்ளுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்

பூரம் திருவிழா நடந்தபோது கலவரம் ஏற்பட்டுள்ளதை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்[11].

எர்ணாகுளத்தில் புறப்பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க சாமியார் சொல்லும் கதை: இக்கதை காளிக்கும் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியாருக்கும் நடந்த சகோதர-சகோதரி பிரச்சினையைக் கூறுகிறது. இது கண்ணூர் என்ற இடத்தில் நடந்ததாக அந்தோணி என்ற பாதிரி கூறியதாக கோரின் டெம்ப்ஸி குறிப்பிடுகின்றார். வருடாந்திர செபாஸ்டியன் சர்ச் விழாவில், கிருத்துவர்கள் தமது ஊர்வலத்தை காளிகோவிலின் வழியாக எடுத்துச் செல்வார்களாம். அப்பொழுது காளிக்கோவிலின் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு, காளி செபாஸ்டியனை செய்வாராம். ஆனால் சமீபத்தில் 1993-1994 வருடகாலத்தில் அக்கிராமத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் (the R.S.S.,a afundamentalist” Hindu political party[12]) என்ற இயக்கத்தைச் சேந்தவர்கள், அவ்வாறு கதவுகளைத் திறக்கவேண்டாம் என்றார்களாம். ஆனால், காளி மிகவும் கோபம் கொண்டாளாம். அதனால், தெவக்குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து அடுத்த ஆண்டில், கதவுகளைத் திறந்து விட்டனராம்.

இது இப்பொழுது உருவாக்கப்பட்டக் கதையாக இருந்தாலும், சபாஸ்டியன் சர்ச் கட்டப்பட்டுள்ள இடம், முன்பு காளி கோவிலுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மதம் மாறிய கிருத்துவர்கள், அதாவது முந்தைய இந்துக்கள் அவ்வாறு காளிக்கு மரியாதை செய்து வந்திருக்கலாம். சென்னையில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலை இடித்தவர்கள், கேரளாவில் இத்தகைய வேடம் போடுகிறார்கள் போலும்.

வேதபிரகாஷ்

27-05-2012


[1]  The moon god “al-Ilah” (Allah) had three daughters named al-Lat, al-Uzza and Manat. The first two were even named after their father. Each daughter had a separate shrine near Mecca, where Allah’s shrine was located. Prior to the rise of Islam, these three goddesses were associated with Allah as his daughters and all were worshiped at Mecca and other places in the vicinity. (Jack Finegan, The Archaeology of World Religions, 1952, p482-485, 492).

[2] பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் குளூனி, “தெய்வீகத்தாய், ஆசிர்வதிக்கப் பட்ட அம்மா – இந்து தேவதைகளும், கன்னி மேரியும்” என்ற நூலில் அவரால் ஸ்ரீ, தேவி மற்றும் அபிராமி மேரியுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ-விஷ்ணு, தேவி-சிவன், அபிராமி-சிவன் என்றுள்ளபோது, மேரிக்கு யார் கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் என்று கேட்டபோது, அவருக்கு முகம் சிவந்து, விருட்டென்று எழுந்து, அடிக்க வரும் போல அருகில் வந்தார். சாட்சிற்கு வெங்கட்ராகவன் என்ற நண்பரும் உடன் இருந்தார்.

Incidentally, this has been the basis of comparative work carried on by Francis Clooney, later published in his book, Divine Mother, Blessed Mother: Hindu Goddesses and Virgin Mary, Oxford University Press, 2005. But, he cleverly avoided this point, see.p.229 etc.

[4] Susan Bayly, Saints, Gooddesses and Kings: Muslims and Christians in South Indian Society 1700-1900, Cambridge, Cambridge University Press, 1989, pp..278-280.

Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.17.

[5] During the late nineteenth and early twentieth centuries, animosity between Hindus and Christians reached their height, articulated most visibly during festivals honoring patron saints and deities. According to BAYLY,confrontations erupted most commonly over the logistics of festival processions or the performance of religious music outside rival temples or churches (1989,313). During the early twentieth century, a Syrian Christian described annual religious festival processions as providing opportunities for Hindu and Syrian celebrants to march past one another’s shrines “howling,screaming and crying out obscene words” (Bayly 1989,294). One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to BAYLY, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities” (1989,313).

[6] During the early twentieth century, a Syrian Christian described annual religious festival processions as providing opportunities for Hindu and Syrian celebrants to march past one another’s shrines “howling,screaming and crying out obscene words” (Bayly 1989,294). One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to BAYLY, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities” (1989,313).

[7] Sita Ram Goel, Catholic ashrams – Sanyasins or Swindlers, Voice of India, New Delhi, 1988.

[8] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988.

[10] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican.

The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. Father Amorthsaid: ‘Practising yoga brings evil as does reading Harry Potter. They may both seem innocuous but they both deal with magic and that leads to evil.’ He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

http://www.dailymail.co.uk/news/article-2066289/Yoga-work-devil-says-Vaticans-chief-exorcist-doesnt-like-Harry-Potter-either.html

[11] In stark contrast to Bayly’s portrayal of communal mayhem unleashed at the Puram festival nearly one hundred years ago are the traditions currently in vogue at Thrissur’s Puram festival.

One of the worst clashes occurred in 1891 when the Malabar Puram festival and Easter coincided, precipitating fierce rioting throughout the region. According to Susan Bayly, where once these occasions were opportunities for “the sharing of rites and regalia… they now provided a focus for the expression of exclusive communal identities”.

Susan Bayly, Saints, goddesses and kings: Muslims and Christians in South Indian society, 1700—1900. Cambridge: Cambridge University Press, 1989, p.313.

[12] பிறகு அடிக்குறிப்பு 12ல், இவ்வாறு அடைமொழியில்லாமல் குறிப்பிடுகின்றார், “the R.S.S., the Muslim League, and the Congress Party occasionally become forces for interreligious division”. ஆகையால், மேனாட்டவர்களுக்கும், மதரீதியில், அரசியல் ரீதியில் விளக்கங்கள் கொடுக்கும்போது, பாரபட்சம், வித்தியாசம் பாராட்டுதல் முதலியவை உKள்ளன என்று தெரிகிறது.

தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்!

மே 26, 2012

தாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்

 

தாமஸ் கட்டுக்கதைகள்: நாட்டுக்கு நாடு கத்தோலிக்கக் கிருத்துவ சாமியார்கள் எப்படி தாமஸ் பற்றிய ரோமாஞ்சன கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில பதிவுகளில் எடுத்துக் காட்டியிருந்தேன்[1]. அங்குள்ள விவரங்களில் குறிப்பிட்ட திட்ட அமைப்பு, வன்முறை, குறிக்கோள் அமூலாக்கம் முதலியவை காணப்பட்டது. உள்ளூர் விவரங்களை அறிந்து கொள்வது, அதில் கிருத்துவத்திற்கு தோதுவாக இருப்பவற்றை முதலில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு படுத்தி எழுதுவது, பிறகு மற்றவர்கள் அதைப் பற்றி நஎழுதுவது-பிரபலப்படுத்துவது, என்று தொடர்ந்து ஒரு 50-100 ஆண்டுகளில் அதனை ஏதோ சரித்திரம் போலாக்கிவிடுகின்றனர். அப்படி அவற்றின் சம்பந்தமாக விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது, கேரளாவிலேயே அவர்கள் ஏகபட்ட கட்டுக்கதைளை கடந்த 300 வருடங்களில் உருவாக்கியிருப்பதைக் கண்டேன். அதற்காக அவர்கள் பற்பல போலி அத்தாட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

 

கிருத்துவ அடிப்படைவாதத்தின் விளைவு: முன்பு நஸ்ரனி.நெட் (http://nasrani.net) என்ற தளத்தில் கிருத்துவர்களுடன் உரையாடல் ஏற்பட்ட போது, எப்படி தமிழகத்தில் ஆர்ச் பிஷப் அருளப்பா, கணேஷ் ஐயர் / ஆச்சார்ய பால் / தெய்வநாயகம் முதலியோர் தாமஸையும் திருவள்ளுவரையும் இணைக்க போலி ஆரய்ய்ச்சி, ஆவணங்கள், முதலியவற்றை உருவாக்கி மாட்டிக் கொண்டார்கள் என்பதனைக் குறிப்பிட்டு அது போலவே, கேரளாவில் தாமிரப் பட்டயங்களை தயாரித்தார்கள்[2] என்று எடுத்துக் காட்டினேன். ஆனால், அந்த தளத்தில் உரையாடியவர்களுக்கு, அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களில் சிலர் சிறிது கூட நாகரிகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்துத் திட்ட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து உண்மையை ஜீரணிக்க அவர்களால் முடியவில்லை என்பது தெரிந்தது. எனவே, இறுதியாக ஒரு பதிவைப் பதித்து விட்டு[3] நிறுத்திக் கொண்டேன். பிறகு, என்னுடைய பதிவுகளைத் தடுத்ததோடு, நீக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்[4]. அதாவது கிருத்துவர்கள், மெத்தப்படித்தவர்கள், மேனாட்டு நாகரிகமுள்ளவர்கள், அதிநவீன ஆடையுடுத்தி வருபவர்கள் முதலியோர்கள்தாம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

   

இந்தியாவை அடக்கியாளும் ஆதிக்க சக்திகள்; ஆனால் கேரளாவில் உள்ள கட்டுக்கதைகள் அதிகார வர்க்கத்தின் அரசியல் பலம், ஆட்பலம், பணபலம் முதலியவற்றுடன் இயங்கி வருவதால், அம்மாநிலத்தில் அத்தகைய போலி ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுகிறவர்கள் யாரும் இல்லை, அல்லது அப்படியிருந்தாலும், அவர்கள் ஒருசிலராக இருந்து மற்ற சித்தாந்த ஆராய்ச்சியாளர்களால் அடக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று தெரிகிறது. கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகமாம், அதற்கு கிருத்துவகள்தான் காரணமாம் – இப்படியும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படி மோசமான போலி ஆராய்ச்சிகளை செய்து கொண்டு, கட்டுக்கதைகளை பரப்பி வரும் அளவிற்கு அவர்களது படிப்பு, படிப்பறிவு உதவுகிறதா அல்லது வேறேதாவது உந்துகின்றதா என்று அவர்களது மனசாட்சி நிச்சயம் அறியும். அத்தகைய அசுர பலத்துடன் வேலை செய்வதால், ஊடகங்களில் ஒருதரப்புள்ள விஷயங்களே வெளிவருவதும் தெரிகிறது. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்றாலும், விடாப்பிடியாக, அனை விரித்து, பெருக்கி, வளர்த்து, மாற்றி புது கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கினறார்கள். அந்நிலையில் தான் தாமஸ்-பகவதி, மேரி-கண்ணனகி, ஜார்ஜ்-பத்ரகாளி, செபாஸ்டியன்-துடபுழா அம்மன் என்று பல “விட்டலாச்சாரி” மாயாஜாலக் கதைகளை பரப்பி விட்டிருக்கிறார்கள். அத்தகைய கதைகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.

 

தாமஸ்-பகவதி சகோதர-சகோதரி கட்டுக்கதை: கேரளாவில் கிராங்கனூர் என்ற ஊரை மையமாக வைத்துக் கொண்டு, இக்கதை புனையப்பட்டுள்ளது. கிராங்கனூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ளது. அங்குதான், இந்த சந்தேகிக்கும் தாமஸ் வந்து இறங்கியதாக கதையுள்ளது. அதற்காகவே இக்கதை அவ்வாறு புனையப்பட்டிடருக்கலாம். 1920ல் தான் இக்கதை பதிவு செய்யப்பட்டதாக சூஸன் பேய்லி[5] என்ற பெண் எழுத்தாளர் எடுத்துக் காட்டுகிறார், இருப்பினும் இக்கதை “முன்னமே” உலாவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நம்ம ஆட்கள், கிருத்துவ போலி ஆராய்ச்சியாளர்கள் இக்கதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். “முன்னமே” என்றால் அத்தகைய அர்த்த்தம் என்று அவர்களது கட்டுக்கதை அகராதியில் உள்ளது போலும். தாமஸ், ஒரு நாள் பகவதி அம்மனுடன் இந்துமதம் பெரிதா, கிருத்துவம் பெரிதா என்று வாதாட ஒப்புக்கொண்டாராம். பாவம் கிருத்துவமதம் அப்பொழுது இருந்ததா, இல்லையா என்று கிருத்துவமதம் தோன்றியதாகச் சொல்லப் படும் பகுதிகளிலேயே அறியப்படாத நிலையில், அப்படி ஒரு வாதம் நடைபேற்றது ஆச்சரியம் தான்.

 

பகவதி அம்மனை துரத்திய அடாவடித் தனம் பிடித்த தாமஸ்: தாமஸ் பகவதி அம்மனுடன் விவாதத்தில் இறங்கினாராம். போகப்போக விவாதம் முற்றி சூடேரியதாம். வாக்குவாதம் உச்சக்கட்டத்தில் போன போது, பகவதி அம்மன் அங்கிருந்து செல்ல முற்பட்டாராம். இல்லை ஒரு பெண்ணிடம் அதிலும் அம்மனாக இருந்த நிலையிலும் சிறிதும் மட்டு-மரியாதை இல்லாமல் ஏதேனும் கேட்டு விட்டாரோ என்னமோ? அதாவது தாமஸுடன் தொல்லைத் தாங்கமுடியாமல் போயிற்று போலும். கிராங்கனூர் ஆற்றின் குறுக்கே குதித்து, கடந்து கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தாராம். உடனே இந்த தாமஸ் பின்னாடியே ஓடி போய் அம்மனை துரத்தி கோவிலுக்குள் நுழைந்தாராம். பெரிய அடாவடித் தனம் பிடித்த ஆளாக சித்தருத்திருப்பது வேடிக்கைதான். பகவதி அம்மன், கோவிலின் கதவை சாத்தும் தருணத்தில் சினிமா ஸ்டைலில் தாமஸ் ஓடி வந்து தனது காலை உள்ளே விட்டு தடுத்தாராம். இடது காலா, வலது காலா என்று தெரியவில்லை.

 

மரக்கதவு கல்லாகிய விட்டலாச்சார்யா மாய்ஜாலம்: இதே கோலத்தில் தாமஸ் வெளியே நிற்க, பகவதி அம்மன் உள்ளே இருந்தாராம். அந்த கதவு கல்லாக மாறும் வரை காலை வைத்திருந்தாராம். மரக்கதவும் கல்லாகி விட்டாதாம்!

  • அதன்பிறகு கல்லாகிய மரக்கதவின் சிறு இடைவெளியிலிருந்து தாமஸ் எப்படி காலை வெளியே எடுத்தார் என்று கதையில் கூறப்படவில்லை.
  • பாவம், கால் மரத்துப் போய் விழுந்து விட்டாரா
  • அல்லது அந்த கல் மறுபடியும் மரமாக மாறியதா?
  • இல்லை காலை மட்டும் வெட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டு சென்றுவிட்டாரா என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை, தெரியவில்லை.

இதற்கு சூஸன் பேய்லி[6] என்ற ஆராய்ச்சியாளர், தாமஸ் கிருத்துவர் என்பதனால் கருவறைக்குள் செல்லக்கூடாது, ஆனால் கோவில் வளாகத்தில் இருக்கலாம், மேலும் இக்கதை இருவரும் சமமானவர்கள் என்று எடுத்துக் காட்டுகிறது, தெய்வீகமானவர்கள் என்று கருதப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கிறார். அதையும் தாண்டி அந்த அம்மையார் என்ன  சொல்கிறார் என்றால், ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கிறார்[7]. அப்படியென்றால் அத்தகைய மோசமான தாமஸை எப்படி கடவுள் போல வைத்துக் கும்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகவியல், மனோதத்துவ ரீதியில் இக்கதையை நோக்கினால், நிச்சயமாக தானஸ் இல்லை ஒரு கிருத்துவப் பாதிரி அவ்வாறான கண்மூடித்தனமான வேலையை செய்திருக்க வேண்டும். அதாவது உள்ளூர் பெண்ணைக் கற்பழிக்கத்துரத்திக் கொண்டு போக, அவள் தப்பித்துக் மொள்ள கோவில் கருவறையில் ஓடி தாழ்ப்பாள் இட்டுக் கொண்டிருக்கலாம். அப்பொழுது அந்த பாதிரி அங்கு வந்தபோது, ஊர்மக்கள் பார்த்து காலையுடைத்தொருக்ககூடும். கிருத்துவகள், அதனை மாற்றி இப்படி தாமஸ் மேலேயேற்றி புதிய கதையை உருவாக்கியிருக்கக்கூடும்.

 

தாமஸ் பகவதி அம்மனை பெண்டாளத் துரத்தினாரா? ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் எனும் போது, கிருத்துவர்களின் ஈனத்தனமாக மனப்பாங்கை காட்டுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல், “Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis”, என்று சொல்லும் போது, கிருத்துவர்களின் இந்து-துவேஷமும் வெளிப்படுகிறது. கிருஷ்ணரை கேவலப்படுத்துவது என்பது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது[8]. ஆக, கிருஷ்ணர் கோபிகளை துரத்திப் பிடித்து காமக்களியாட்டம் நடத்தியது போல, தாமஸ் சென்றிருக்கலாம் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். கிருஷ்ணர் தாமஸைப் போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா அல்லது தாமஸ் கிருஷ்ணரரைப்போல  வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா என்று தெரிடயவில்லை. எப்படியாக இருந்தாலும், அயோக்கிய தாமஸ், கட்டுக்கதையில் கூட பெண்டாளும் எண்ணத்துடன் இருக்கிறான் என்றால், கிருத்துவர்கள் அந்த நிலைக்கும் தயார் என்கிறார்கள் போலும்!

பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகளாம்: மேனாட்டவருக்கு இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரிய கூறுகளைப்[ பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் தெரிந்தும், , கேலி பேசும் துச்சமாக மதிக்கும் தூஷிக்கும், அவதூறு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே எழுதும் போக்கு காணப்படுகிறது. மேலே எடுத்துக் காட்டியபடி, மற்றொரு விவரமும் காணப்படுகிறது.  அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல்[9] எழுதியதில், “Bhagavati and St. Thomas are also seen as flirtatious companions” என்று காணப்படுகிறது. அதாவது “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” காமக்களியாட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள். பிறகு அழகர் / விஷ்ணுவின் சகோதரியான மீனாட்சி சுந்தரேஷ்வருடைய காதலியாக இருப்பதுடன் ஒப்பிடுகிறார்கள்[10]. இப்படியெல்லாம் கதைகள் கட்டிவிட்டு, பிறகு பகவதி மேரியின் சகோதரி என்கிறார்கள்.

 

தாமஸ் யார், மனைவி,மக்கள் யார்? இவர்களின் கட்டுக்கதையின் படி, பகவதி மேரியின் சகோதரி என்றால் ஜோசப் மைத்துனராகிறார், ஏசு மகன் போலாகிறார், இந்த அடாவடி அக்கிரம தாமஸும் ஏசு மகன் போலாகிறார். ஏனெனில் ஏசு-தாமஸ் இரட்டையர்களாம். தாமஸுக்கு 29வது வயதில் திருமணமாகி நான்கு குழந்தைகளும் பெற்றெடுத்தாராம்[11]. தாமஸ் எப்பொழுதும் எதற்கும் ஒப்புக்கொண்டாலும், சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும், சந்தேகப்படும் பேர்வழியாக இருந்ததால், ஆரம்பகால வாழ்க்கை சந்தோஷமாக இல்லையாம். அதனால், அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்ந்தபோது, மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டதாம். முதலில் “தாமஸ்” என்பது பெயர் கிடையாது, ஒரு இரைட்டையான என்று பொருள்படும் அடைச்சொல் / உரிச்சொல், பிறகு அதனை பெயர்ச்சொல் போன்று உபயோகப்படுத்தினர்.

 

மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது: ஆக மேரிக்கு மகன் போல தாமஸ் இருக்கும்போது, பிறகு எப்படி, “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது, ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் அத்தகைய நிகழ்வுகள் உள்ளன. ஓடிபஸ் குழப்பம்[12] என்ற சிந்தனையில், மகன் தாயின் போது மோகம் கொள்கிறான் என்று கிரேக்கப் புராணங்களில் உள்ளன. அவை பைபிளிலும் காணப்படுகிறது. பொய் கதைகளை உருவாக்குவதால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிதற்றுகிறார்கள், பித்தலாட்டத்துடன் எழுதுகிறார்கள். பகவதி அம்மனின் விழாக்களை ஒரு பக்கம் கிருத்துவத்துடன் ஒப்பிட்டு, சேர்த்து எழுதும் போது[13], மறு பக்கத்தில் இகழ்ந்து தூஷிக்கிறர்கள்[14]. மீனம் பரணி விழாவில் பக்தர்கள் கோழியை அறுத்து, பாலியல் ரீதியிலான பாடல்களை பாடுகிறார்கள் என்று எழுதுகிறர்கள். பிறகு கோழியே பாலியில் சின்னம் என்றும் எழுதுகிறார்கள்.இப்படி முரண்பாடுகளுடன் எழுதுவதிலிருந்து, அவர்களின் மனங்களில் எப்படியாவது கிருத்துவத்தின் தொன்மையை, இந்துமதத்துடன் தொடர்பு படுத்தி, நிலைநாட்ட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால், சரித்திர ரீதியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதினாலும், கிருத்துவத்தின் தாக்கம், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே நன்றாக பதிந்திருப்பதினாலும், அதற்கு முன்பாக கிருத்துவம் இருந்தது  என்று வாதிடும் போது, கள்ள ஆவணங்களையும், திரிபு வாதங்களையும் தான் முன் வைக்க முடிகிறதே தவிர, வேறு எந்த அத்தாட்சிகளையும் வைக்க முடிவதில்லை. அதாவது அவ்வாறான ஆதாரங்கள் இல்லாததால் முடியவில்லை. இருப்பினும், அத்தகைய நிலையை சிலர் ஒப்புக் கொண்ட போதிலும், மற்றவர்கள் விடாப்பிடியாக அத்தகைய போலிகளை, மாயைகளை செட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேன்மேலும் தவறுகளை செய்து கொண்டு, குழப்பி வருகிறார்கள்.

 

வேதபிரகாஷ்

26-05-2012


[2] Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810.

To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

[5] Susan Bayly, Saints, Gooddesses and Kings: Muslims and Christians in South Indian Society 1700-1900, Cambridge, Cambridge University Press, 1989, pp..278-280.

[6] Ibid, p.279.

[7] Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis.

Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.17

[8] John  P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.

[9] Alex C.J. Neroth Van Vogelpol, Influences of Hinduism on the Syrian Christianity of St. Thomas of Kerala, India, 2003, p.14. http://alexnvv.axspace.com/documents/SMPaperNvV.pdf

[10] G. Corinne Dempsey, Kerala Christian Sainthood: Collisions of Culture and Worldview in south India, Oxford University Press, 2001, pp.60-61.

[11]
When Thomas joined the apostles, he was twenty-nine years old, was married, and had four children. The early home life of Thomas had been unfortunate; his parents were not altogether happy in their married life, and this was reflected in Thomas’s adult experience. He grew up having a very disagreeable and quarrelsome disposition. Even his wife was glad to see him join theapostles; she was relieved by the thought that her pessimistic husband would be away from home most of the time. Thomas also had a streak of suspicion which made it very difficult to get along peaceably with him.

http://www.truthbook.com/index.cfm?linkID=142

[12] In psychoanalytic theory, the term Oedipus complex denotes the emotions and ideas that the mind keeps in the unconscious, via dynamic repression, that concentrate upon a boy’s desire to sexually possess his mother, and kill his father.  ]Sigmund Freud, who coined the term “Oedipus complex” believed that the Oedipus complex is a desire for the mother in both sexes (he believed that girls have a homosexual attraction towards their mother)

[14] M. J. Gentes, Scandalizing the Goddess at Kodungallur, Asian Folklore Studies
Vol. 51, No. 2 (1992), pp. 295-322; Published by: Nanzan University
Article Stable URL: http://www.jstor.org/stable/1178336

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

ஏப்ரல் 6, 2012

கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!

Inscriptions strewn at Kapeleswarar temple 6-4-2012 DM

தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].

கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].

Kapaleswarar teple inscription strewn around DM.2011-1

சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது.சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.

தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.

என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“…………………………………….               நீளோ தம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.

  1. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.
  2. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.
  3. மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.
இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-2

துறைமுக நகர்: இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா? அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா?). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே? இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது?

எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.

Kapaleswarar teple inscription strewn around DM.2011-3

கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து  கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக  இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .

 

மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.  இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.

சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.

இப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள் ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.

வேதபிரகாஷ்

06-04-2012


[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள்,  ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=442587

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

திசெம்பர் 31, 2011

தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்

Thomas myth propagated by Dinamalar 25, 2011 photo-9

உமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].

Thomas myth propagated by Dinalar 2011

தேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.

Thomas myth propagated by Dinamalar 2011 photo-2

கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].

Thomas myth propagated by Dinamalar 2011 photo-3

இந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.
உலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.
புனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.

Thomas myth propagated by Dinamalar 2011 photo-4

சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்!

Thomas myth propagated by Dinamalar 2011 photo-61952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.

Thomas myth propagated by Dinamalar 2011 photo-7

1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.

Thomas myth propagated by Dinamalar 2011 photo-8

1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். Vedaprakash book 1989

அங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.

 

1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.Thomas myth propagated by Dinamalar 2011 photo-5

2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.

கல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.

இவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா? அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா? பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா? வாக்குக் கொடுக்க முடியுமா? இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா?

உள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.

Vedaprakash book 1989, wrapper

தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை!வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].

வேதபிரகாஷ்

31-12-2011


[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம்,  பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=373422

[2] எஸ்.உமாபதி, தேசியதிருத்தலமானபுனிததோமையார்மலை, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 IST, http://www.dinamalar.com/testing/2011/Supplementary_detail.asp?id=4223&ncat=9&Print=1

[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்!

[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது!

[5] தினமலர், தேசியதிருத்தலமான  சென்னை புனிததோமையார்  பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.

[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.

[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

மே 3, 2010

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

செபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு? செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]

தெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது? எம்.  தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]. பிறகு எப்படின் இந்த இரண்டு மோசடி பேர்வழிகளும் சேர்ந்து கொண்டு, தாமஸ் விவகாரத்தில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக வாமுடியும்?

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

கிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை? தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விஷமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

“சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன? சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].

அரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான்! இல்லை “பார்ப்பனர்” ப்யந்துவிட்டாரா? சூத்திரனிடம் எம்.எல்.ஏ பதவி கேட்டால் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப் போடுகிறாரா?

போலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].

தமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள் …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும். கிருத்துவர்கள் தமிழ் பெயரில் இப்படி போலித்தனமாக உலாவருவதை தமிழ் மக்கள் தடுக்கவேண்டும்.

கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.

என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா-நாத்திக-கிருத்துவ-கூட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.

ஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

கிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக் கொண்டது நல்லதுதான்.

கிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம்! பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார்! அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்!

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

இந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம்! பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

09-05-2010 (அன்று திருத்தியது)

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

ஏப்ரல் 19, 2010

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

இந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி!

மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…

சைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………

கிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம். ஆனால் “செக்யூலரிஸம்” போர்வையில் மறைக்கப் படுகிறது.

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். இதைப் பற்றி சரித்திர ஆவணங்கள் பல உள்ளன. ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.

Temple-says-christians-demolished

Temple-says-christians-demolished

போலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா பிஷப்பாக இருந்தபோது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து, ஆச்சார்யா பால் என்பவை ஊக்குவித்து, போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.

Kapaleswar-temple-says

Kapaleswar-temple-says

பெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும். தமிழகத்தைச் சேர்ந்த பிஷப்புகளே, அத்தகைய செக்ஸ்-குற்றங்களில் மாட்டிக் கொண்டு, ஜெயிலிலும், வெளியிலும் இருக்கிறார்கள்! ஊட்டியில் ஒரு செக்ஸ்-பிஷப் மறைந்திருக்கிறார், மதுரை பிஷப்போ இத்தாலியில் மாட்டிக் கொண்டுள்ளார்!

தமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்! ஆபாசப்படம் எடுக்கும் வித்தகரான லெனின், இப்பாதிரிகள் / பிஷப்புகள் காமலீலைகள் பற்பல இருந்தாலும் வீடியோ எடுக்கமாட்டார்கள் போலும்!

தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை?  உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்!

© வேதபிரகாஷ்

19-04-2010