தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு!
தாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது. இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை! வருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[1]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[2].
அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், கோடிகளில் தாமஸைப் பற்றி திரைப்படம் எடுப்போம்[3] என்று கருணாநிதியை வைத்துக் கொண்டு ஒரு நாடகம் நடத்தினர்[4]. இப்பொழுது அவரது பிள்ளைய ஸ்டாலினை கூட்டி வைத்துக் கொண்டு, இன்னொரு விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். அதாவது, இந்து கோவில் இடிக்கப் பட்ட இடத்தை[5] கிருத்துவ புண்ணியஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த மாயாஜால விளையாட்டு ஆடப்பட்டுள்ளது. பொய்களுக்கு மேல் பொய்களை அடுக்கிக் கொண்டே போகும் வெட்கங்கெட்ட நிலையில் கிருத்துவர்கள் இருப்பது, மிவும் கேவலமானது. இல்லாத தாமஸ் இருந்தததாக, வராத ஆள் வந்ததாக, இப்படி தொடர்ந்து கதைகளைக் கட்டிவரும் மோசடி கிருத்துவர்கள், இப்பொழுது “…………விரல் எலும்பு ……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”, என்று குண்டு விட்டுள்ளார்கள்.
மை டியர் குட்டிச் சாத்தான் விளையாட்டு ஆடுகின்றனரா? இல்லாத தாமஸ், வராத ஆள் என்ற நிலையுள்ளபோது எங்கிருந்த இந்த எலும்பு வந்தது? ஓர்டோனா சர்ச்சிலிருந்து கடனாக வாங்கி வந்து வைத்துக் கொண்டதுதானே இது? பிறகு என்ன அந்த புளுகுமூட்டை “……….தொண்டு, சேவை நினைவை ஞாபகப்படுத்தும் பழைய பொருளாக உள்ளது”? எப்படித்தான், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், சூடு-சொரணை இல்லாமல், இந்த கிருத்துவர்கள் இப்படி ஈனச்செயல்களில் ஈடுபடுகின்றனரோ என்று தெரியவில்லை.
ஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது[6]. இக்கூட்டத்தில், போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ பங்கேற்கிறார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் 06-01-2011 அன்று துவங்குகியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.
புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி: . கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்பார் என்று சி.பிசி.ஐ செய்தி வெளியிட்டிருந்தது[7]. ஆனால், ஸ்டாலின் தான் கலந்துகொண்டார். சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “புனித தாமஸ் மலை திருத்தலமானது தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தேசியத் திருத்தலமாக உயர்த்தப்படும் நிகழ்ச்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஜீலை 2010ல் தமிழக ஆயர் பேரவை இதனை தமிழக திருத்தலமாக உயர்த்தி அறிவித்தது பெருமைப்படத்தக்கது. அகில இந்திய ஆயர் பேரவை இந்த இடத்தை தேசிய திருத்தலமாக அறிவித்துள்ளது. அதற்கான விழா இன்று நடைபெறுகின்றது.
“அன்பு, பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மனித குலத்திற்கு போதித்த, இயேசு கிருஸ்துவின் கொள்கைகளை உலகத்தின் பல பகுதிகளுக்கும்
எத்தனை தடவை எடுத்துக் காட்டினாலும், கிருத்துவர்கள், இப்படி விடாப்பிடியாக இந்த கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மர்மம் என்னவென்று புரியவில்லை. |
சென்று போதித்து, கிருஸ்துவ மதத்தை பரப்பிய, கிருஸ்துவின் நற்செய்திகளை மக்கள் சமுதாயத்திற்கு தெரிவித்த, தூதர்களில் புனித தாமஸ் சிறப்பான புகழுக்கு உரியவர். இவர் கி.பி.52ல் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், அப்போது மயிலை என்று அழைக்கப்பட்ட சென்னையின் தற்போதைய மயிலாப்பூர்
ஸ்டாலினுக்கு யார் வந்து இந்த கதையினை சொன்னார்கள் அல்லது எந்த கல்லுரியில் படித்து தெரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அப்போஸ்தலரே ஆயினும் ஒருதடவைக்கு மேலே மரித்திரூக்கமுடியாது என்று வின்சென்ட் ஸ்மித் சொன்னதை மறைத்து ஆடுகின்ற நாடகம் இனி மறுபடியும் மக்கள் அறிந்து திட்டவேண்டும் போலிருக்கிறது! |
பகுதிகளில் இவர் இயேசு கிருஸ்துவின் போதனைகளை போதித்தார். அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை எனப்படும் சிறிய குன்றில் இவர் தவம் இருந்தார் என்றும், பிறகு புனித தாமஸ் மலை என்று அழைக்கப்படுகின்ற இந்த மலையில் தங்கியிருந்தார் என்றும், இந்த இடத்திலேயே அவர் ரத்தம் சிந்தி இயற்கை எய்தினார் என்றும், நாம் அறிவோம்[8].
“சாந்தோமில் அமைந்துள்ள தேவாலயம், இந்த மலையில் அமைந்துள்ள
போர்ச்சுகீசியர் அதனை கொண்டு வைத்தனர் என்று அவர்களே தங்களது ஆவணங்களில் எழுதிவைத்துள்ளனர். பிறகென்ன இந்த கதை விடுவது?. “. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன”, என்று சொல்லும்போதே அந்த உண்மை புலப்பட்டு விடுகிறது! |
ஆலயம் ஆகியவை புனித தாமஸின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் நிலைபெறுகின்றன. இந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்றபோது, மேரி மாதாவின் உருவம் அடைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அன்னை மரியாள் என்ற பெயரில் பழைய ஆலயம் அழைக்கப்பட்டது என்பதற்கு இது சான்று. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புனித தாமஸுடைய விரல் எலும்பு. இது அவருடைய தொண்டினை, சேவையை மற்றும் நினைவை நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்தும் ஒரு பழமையான நினைவுப் பொருளாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன.
“தேசியத் திருத்தலமாக இன்று உயர்த்தப்பட்டுள்ள புனித தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனைப்பற்றி ஏற்கனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து
சட்டசபையில் இத்தகைய பொய்மால வரைவுதிட்டம், பரிசீலினைக்கு வரும்போது, அதை சரித்திர ஆதாரமற்றது என்று நிராகரிக்கப் படவேண்டும். இல்லையென்றால், அது நிச்சயமாக, அயோத்தி போன்ற ஒரு பெரிய பிரச்சினையில் முடியும் என்பது திண்ணம்[9]. ஏனெனில் கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, அங்கு சர்ச்சைக் கட்டியவர்களே[10] கிருத்துவர்கள் தாம்! |
உள்ளேன். நீங்கள் அனுப்பிய வரைவுத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சட்டப்பேரவை நடைபெறும் நேரம். எந்த ஒரு திட்டத்தையும் சட்டப்பேரவையில் தான் அறிவிக்க வேண்டும். எனவே, எனது உறுதியினை மட்டும் அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்”, இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].
அரசாங்கம் சரித்திரத்திற்குப் புறம்பாக, கிருத்துவர்களின் மோசடிகளுக்கு துணைபோகக் கூடாது. இதனால், பிறகு பெரிய பிரச்சினைகள் எழும். மேலும், கிருத்துவர்களுக்கும், இத்தகைய மோசடிகள் நன்மைப் பயக்காது. நாளைக்கே மேனாட்டவர் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளலாம். போப் ஏற்கெனெவே, இந்த கட்டுக்கதையை நம்ப்பவில்லை, மற்றும் அதனை மறுத்தும் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்டாலின், துணை முதலமைச்சர் என்ற நிலையில் கலந்து கொண்டதே சரியான நிலைப்பாடில்லை. தொடர்ந்து, இப்படி இந்துக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டேயிருந்தால், விளைவுகள் நிச்சயமாக வேறுவிதமாகத்ததன் இருக்கும்! செக்யூலார் அரசு எல்லோருடைய உரிமைகளையும் முதலில் காக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையினையை மறக்கக் கூடாது.
வேதபிரகாஷ்
10-01-2011
[3] http://apostlethomasindia.wordpress.com/2010/02/01/indian-historian-makes-a-mockery-of-indian-history-veda-prakash/
[4] http://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/
[5] ஆர். அருளப்பா, புனித தோமையார், ஆயர் இல்லம், சென்னை, 1986. இந்த புத்தகத்தில், அந்த இடத்தை தோண்டியபோது, கோவில் அமைப்பு போன்று அஸ்திவாரம் இருந்தது. கீழே ஒரு சக்கரம் கிடைத்தது. இது இந்து கோவில்களில் இருப்பது போல இருந்தது. என்றெல்லாம் எழுதியுள்ளார்.
[6] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160658
[7] Later, on Jan. 9, the prelates are to attend a public reception by Madras-Mylapore archdiocese which Tamil Nadu state Chief Minister Muthuvel Karunanidhi is also expected to attend.
Cathnews India, Bishops aim to strengthen Indians’ ‘moral fiber’, Published Date: January 6, 2011, http://www.cathnewsindia.com/2011/01/06/bishops-aim-to-strengthen-indians%E2%80%99-%E2%80%98moral-fiber%E2%80%99/
[9] The Kapaleeswarar Temple itself says that it was there on the shore, but the Chistians demolished it!
https://thomasmyth.wordpress.com/2010/01/28/கபாலீஸ்வரர்-கோவிலே-சொல்க/
The hypocrite Christians who demolished the Kapaleeswarar temple.
https://thomasmyth.wordpress.com/2010/04/19/கபாலீஸ்வரர்-கோயிலை-இடித்/
[10] https://thomasmyth.wordpress.com/2010/04/19/christians-who-demolished-kapaleswarar-temple-enact-another-drama/
[11] தினமணி, தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின், First Published : 09 Jan 2011 12:23:44 PM IST;Last Updated : 09 Jan 2011 12:26:00 PM IST;
http://dinamani.com/edition/story.aspx?Title=…….164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
குறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிறைத்தண்டனை, சிலுவை, செயின்ட் சேவியர், ஜோஸப், தாமஸ் கட்டுக்கதை, திரியேகத்துவம், தெய்வநாயகம், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பிதா, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மேரி, மையிலை பிஷப், மோசடிகள், ரெட்சிங்கர்
5:47 முப இல் பிப்ரவரி 28, 2011 |
[…] https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/ […]
2:43 முப இல் ஏப்ரல் 24, 2012 |
இப்பொழுது கபாலீசுவர் கோவிலில் வைக்கப் பட்டுள்ள கல்வெட்டு போல, சர்ச்சிற்கு எதிரில் / பக்கத்தில், “கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடம்” என்று பல்ககைகளை வைக்க வேண்டும்.
அப்பொழுது தான் தெரியும், அந்த தேசிய திருத்தலத்தின் மகிமை!
3:47 பிப இல் ஜூலை 6, 2011 |
They can play their tricks with the present CM also, as they were already hobnobbing with her before elections.
2:41 முப இல் ஏப்ரல் 24, 2012 |
நிச்சயமாக, தங்கத் தாரகைக்குப் பதிலாக வைரத் தாரகைக் கொடுத்தால், இருக்கின்ற கபாலிசுசவரர் கோவில் கூட கிறிஸ்தவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்!
பெரியார் நாமம் வாழ்க!
அண்ணா நாமம் வாழ்க!!
4:08 முப இல் ஏப்ரல் 6, 2012 |
[…] [7] https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/ […]
2:44 முப இல் ஏப்ரல் 24, 2012 |
அடுத்த தமிழ்நாட்டு நாணவியல் மாநாட்டின் ஒத்திகை போலும்!
6:56 முப இல் ஜூன் 7, 2012 |
This is a clear case of interference and manipulation of Church with Indian polity and this has been the pattern of the Vatican to control countries since the medieval period.
Here, in Tamilnadu, if they could play with the atheist CM, then they could easily ploy with the so-called Brahmin CM by awarding another title like “Golden Star”.
Therefore, father or son, none would feel anything, as long as they are benefited.
They know that Indians have little concern for history, historicity and other factors. And therefore, the Christians could easily fool the Indians.
2:19 முப இல் ஜூன் 15, 2012 |
இத்தகைய அரசியல் சம்பந்தங்களும், செக்யூலார் நாட்டில் எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதி, ஆட்சி, அதஇகாரம் வேண்டும் என்றால், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம்.
அகில் உலக ரீதியில், தங்களுக்குண்டான பலத்தை உபயோகிக்கலாம். ஆனால், மக்களிடம் நனல்ல உறவுகளை வ்அளர்த்துக் கொள்ள முடியாது.
3:18 முப இல் ஜூன் 24, 2012 |
[…] https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/ […]
9:50 முப இல் செப்ரெம்பர் 4, 2019 |
[…] https://thomasmyth.wordpress.com/2011/01/10/74-now-stalin-dragged-into-thomas-myth/ […]