தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்?
எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.
முருக பக்தர்களை ஏமாற்றியது: ஆய்வு, ஆராய்ச்சி என்று வந்த கூட்டத்தைவிட, முருக பக்தியோடு வந்த பக்தர்கள்தாம் அதிகம். ஞானப்பழம் சொட்டுவது போல பாட்ரிக் ஹேரிகன் முருகனுக்காக, ஒரு பிரமாதனான இணைத்தளத்தை அமைத்துள்ளார்[2]. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரேத்தான் அந்த தாமஸ் கட்டுக்கதையிலுள்ள மோசடிகளை எடுத்துக் காட்டும் இணைத்தளத்தையும் நிர்வகித்து வருகின்றார்[3]. பிறகு எப்படி மறுபடியும் “இந்தியாவில் ஆதி கிறித்தவம்” என்று ஆரம்பித்துள்ளார்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.
முருகன் மாநாட்டு ஆய்வாளர்களை ஏமாற்றியது: முருக பக்தர்களை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து, ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றிலிருந்து, கிருதுவத்திற்கு சாதகமாக அல்லது முருகனுக்கு / சைவத்திற்கு எதிராக எப்படி அந்த தகவல்களை உபயோகப் படுத்தலாம் என்று ஒத்திகை செய்துள்ளது மாதிரி உள்ளது. ஏனெனில், இம்மாநாட்டு கட்டுரைகள் எல்லாம் தொகுத்து வெளியிடப் படும் எனெல்லாம் வாக்குறுதிகள் தாராளமாகச் செய்யப் பட்டன. உதாரணத்திற்கு, மலேசிய மாநாட்டில், அங்கு வந்திரிந்த மலேசிய அமைச்சர், ஆய்வாளர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றதும், ஒரு மாதத்திற்குள், அந்த ஆய்க்கோவை புத்தகம் வீடுகள் தேடி சென்றடைய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றேல்லாம், பத்துமலை முருகன் கோவிலின் வளகத்தில் சத்தியம் செய்து சொன்னார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும், எந்த மாநாட்டிற்கும் ஆய்வுத்தொகுதி வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆக, ஒருவேளை, இதற்காக, ஏதாவது நிதி திரட்டியிருந்தால் “அரோகரா” தான்! வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான்! 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான்! ஜான் சாமுவேல் தான் ஜாலியாக ஓசி விமான டிக்கெட், கமிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு ஜாலியாக குடும்பத்தோடு வந்து அனுபவித்துச் சென்றுள்ளார்.
1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[4]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[5] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[6]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
முருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
முருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – நகார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.
மொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.
மலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.
2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.
2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[8]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[9]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:
The Board of Governors
- Dr. M. Israel – Chairman – எம். இஸ்ரேல்
- Dr. G. John Samuel – Secretary – ஜான் சாமுவேல்
- Dr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.
Members – உறுப்பினர்கள்
- Mr. M.S. Venkatachalam
- Dr. K. Malaisamy, M.P.
- Dr. P. Subramanian
- Dr. M.J. Mohan
- Dr. Sundar Devaprasad
- Mr. V.S. Ramalingam
- Dr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.
- Dr. Tsutomu Kambe
- Dr. Y. Dennyson
- Dr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.
இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.
© வேதபிரகாஷ்
21-01-2011
[1] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”, http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
[4] http://rationalisterrorism.wordpress.com/2010/02/11/tirukkural-muslims-oppose-christians-defame-but-tamils-keep-quite/
[5] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419 E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, ல் காலமகிவிட்டார் என்று தெரிகிறது.
[6] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.
[7] First International Conference Seminar on the History of early Christianity in India (July 2005), http://www.xlweb.com/heritage/asian/christianity-conference.htm
[8] Second International Conference Seminar on the History of early Christianity in India (14th to 17th January 2007, http://www.xlweb.com/heritage/asian/christianity-conference2.htm
[9] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)
குறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எம்.சி. ராஜமாணிக்கம், எஸ். கொடுமுடி சண்முகம், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தெய்வநாயகம், பத்துமலை, பாட்ரிக் ஹாரிகன், போலி சித்தராய்ச்சி, மைக்கேல் ஃபாரடே, மோசடி ஆராய்ச்சி, ராஜு காளிதாஸ், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி
8:26 மு.பகல் இல் ஜனவரி 27, 2011 |
As I have seen your comments here: http://bharatabharati.wordpress.com/2010/04/05/hindu-activists-sexist-racist-xenophobic-ishwar-sharan/comment-page-1/#comment-902, I posted my comments as follows:
—————————————————————————–
Exactly, one year back, in the Hindu Spiritual fair conducted at Tiruvanmiyur, Madras, some Christians with their Black Parivar entered and making enquiries about the stalls of Nityananda, Ravisankar and Jaggi Vasudev.
Particularly, a person with a bag hanging from his shoulder, a typical Communist like, was seen vehemently arguing with one person from Srirangam. In fact, he took a snap pf that fellow. Later on enquiry, he was known to be Christian from Bangalore.
One fat man was arguing at Ravisankar stall taking objection to the usage of symbols of cross, cresent-star etc with OM and other symbols.
In fact, he was arguing why Jaggi Vasudev is supported inspite of a case booked against him for kii\lling his wife. The news appeared in papers.
Therefore, it is evident that the infiltration of these fellows inside Hindu organizations as they have been very porous.
By the way, will you please explain how Patrick Harrigan is maintaining your anti-thomas website and as well as John Samuel’s pro-thomas website?
Do not say, it is his business and all, as he is not doing such work like Ramjerhmalani!
——————————————————————————-
As it has relevancy, I am posting here also.
5:48 மு.பகல் இல் பெப்ரவரி 28, 2011 |
[...] [...]
2:40 மு.பகல் இல் ஆகஸ்ட் 25, 2011 |
முருகன் பெயரில் மாநாடுகளை நடத்தி இந்துக்களை ஏமாற்றி, இப்பொழுது, தன்னுடைய உண்மையான நிறத்தைக் காண்பித்துவிட்டார் என்று தெரிகிறது.
சங்கராச்சாரியாருடன், விபூதி வைத்துக் கொண்டு மலேசிய அமைச்சருடன் வந்து, மக்களை நன்றாகவே ஏமாற்றியுள்ளார்.
அந்த மலேசிய அமைச்சர், ஆறே மாதங்களில் ஆய்வுக் கோவை, ஆய்வாளர்களுக்கு தபாலில் அனுப்பி வைப்பேன் என்று பத்துமலை முருகன் கோவில் வளாகத்திலேயே சூளுரைத்தார். ஆனால், ஒன்று நடக்கவில்லை.
இப்பொழுது, தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டிருப்பது, கிருத்துவர்களின் சதிதிட்டத்தின் ஒரு அத்தியாயமே.
கீழ்காணும் இணைத்தளம் இவர்களுடைய போலித்தனமான வேலைகளை எடுத்துக் காட்டுகிறது:
http://www.christianindiaministries.org/books.html